கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!!

Read Time:2 Minute, 14 Second

54a4dd08-30f3-409f-a0db-514b74252e12_S_secvpfகேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது.

இப்பள்ளி வளாகத்தில் உள்ள மழலையர் வகுப்பில் எல்.கே.ஜி. படித்துவரும் நான்கரை வயது மாணவியிடம் கடந்த (அக்டோபர்) மாதம் 30-ம் தேதி அன்பாக பேசிய இரு மாணவர்கள், அந்தக் குழந்தையை ஆஸ்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

தனிமையை பயன்படுத்தி அவளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மாணவர்கள், சிறுமி வலியால் துடித்து, கூச்சலிடவே அந்த இடத்தை விட்டு தப்பியோடினர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின்னர், பிறப்புறுப்பில் தாங்க முடியாத வலியால் துடித்த அந்தக் குழந்தை, பள்ளி ஆஸ்டலில் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதாள்.

இதனையடுத்து, வாலையம் பகுதி போலீஸ் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையின் முடிவில் அவள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது, உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பால் மணம் மாறாத குழந்தையிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துக் கொண்ட அந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர் அணியினர், சம்பவம் நிகழ்ந்த பள்ளியின் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!
Next post 53 வயது – 140 பேருடன் காதல் லீலை..!!