திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!
Read Time:53 Second
திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் மணி(61). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது பேத்தி சத்தியகலா(14). பெற்றோரை இழந்த சத்தியகலா தாத்தா–பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தில் தங்கியிருந்து பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி சென்ற மாணவி சத்தியகலா திடீரென மாயமானார். அவர் எங்கு சென்றார்? யாரும் கடத்தினார்களா என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating