வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் திருமணத்துக்கு கடத்தல்!!

Read Time:2 Minute, 1 Second

22a6020c-a357-43a9-8ff3-77ccdd9a0495_S_secvpfவேடசந்தூர் அருகே உள்ள காலணம்பட்டி, லட்சுமணன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரும் இவரது மனைவியும் அங்குள்ள மில்லில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களது மகள் சாருமதி(வயது16). 10–ம் வகுப்புவரை படித்துள்ள இவர் வீட்டுவேலைகளை கவனித்து வந்தார். இந்நிலையில் சாருமதியும், அதேபகுதியை சேர்ந்த திருமல்சாமி என்பவரின் மகன் கார்த்திகேயனும் காதலித்து வந்தனர்.

இவர்கள் காதல் வெளியே தெரியவே சாருமதியை பெற்றோர் கண்டித்தனர். ஆனால் கார்த்திகேயன் வீட்டில் ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் சம்மதம் தெரிவித்தனர்.

சாருமதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் பற்றி பேசுவதற்கு தயங்கினர். இந்நிலையில் சம்பவத்தன்று சாருமதியின் பெற்றோர் மில் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் கார்த்திகேயன் அங்கு வந்து சாருமதியை கடத்திச்சென்றார்.

வேலை முடிந்து வீடுதிரும்பிய பெற்றோர் மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். விசாரித்ததில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பாலகிருஷ்ணன் வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார். தனது மகளை கார்த்திகேயன் கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ள அவர் அதற்கு உடந்தையாக அவரது தந்தை இருந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!!
Next post யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் உட்பட மூவர் கைது!!