கணவருடன் தகராறு: காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவு!!
கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (28), கூலித் தொழிலாளி. இவர் மனைவி பவித்ரா (19), 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன், மனைவிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தகராறில் பவித்ரா மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட ஜெகன்நாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் அவரை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் செங்கல்பட்டு ஆர்டிஓ பன்னீர்செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.
கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வரலட்சுமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இதில் கணவன், மனைவிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வீட்டில் வரலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating