கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!!
திண்டுக்கல் அருகே உள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது27). இவரது நண்பர் மின்னல்கண்ணன். இவர் வடமதுரை சித்தூரை சேர்ந்த கந்தசாமி என்பவர் மனைவியை கடத்திச் சென்றுவிட்டார்.
இதனால் கந்தசாமி உறவினர்கள் பாண்டி, பெரியசாமி, சீனிவாசன் மற்றொரு பெரியசாமி ஆகியோருடன் தாமரைக் கண்ணனிடம் சென்று மின்னல்கண்ணன் தனது மனைவியுடன் பதுங்கியிருக்கும் இடத்தை கூறுமாறு கேட்டார்.
அதற்கு தாமரைக் கண்ணன் அவர்கள் எங்குஇருக்கிறார்கள் என்பது எதுவும் தெரியாது என்றார். இதனால் கந்தசாமி தரப்பினர் உண்மையை கூறுமாறு வலியுறுத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் தாமரைக்கண்ணனை அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி சீனிவாசன், பெரியசாமி, மற்றொரு பெரியசாமி ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
Average Rating