வியாசர்பாடியில் 15 வயது இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 48 Second

3738a9f4-083b-41b5-86cf-bd3e68d34095_S_secvpfவியாசர்பாடி எஸ்.ஏ. காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது 15 வயது மகள் ராஜேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 23–ந்தேதி வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி மாயமானாள். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுரளி விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில் ராஜேஸ்வரியை அவரது கம்பெனியில் வேலை பார்க்கும் சதீஷ் (29) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

அவர்களை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப்–இன்ஸ்பெக்டர் விவேக் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

கோவை மாவட்டம் காளம் பாளையத்தில் ஒரு வீட்டில் ராஜேஸ்வரி அடைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை மீட்டு கடத்தி சென்ற சதீஷையும் கைது செய்தனர். சதீஷ் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அழைத்து வரப்பட்ட ராஜேஸ்வரி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கைதான சதீசுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
Next post திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!