எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
Read Time:1 Minute, 20 Second
வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 19–வது தெருவில் வசிக்கும் ராஜேஸ்வரி மகள் கல்பனா (21). இவர் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆவடியை சேர்ந்தவர் சதீஷ் (25) கூரியர் நிறுவன ஊழியர்.
சதீசும்–கல்பனாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். நேற்று திடீர் என கல்பனாவை காணவில்லை. இதுகுறித்து ராஜேஸ்வரி போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் சதீஷ்–கல்பனா இருவரும் திருமண கோலத்தில் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி இரு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். கல்பனாவின் தாயார் ராஜேஸ்வரி மகள் திருமணத்தை ஏற்க முடியாது என்றார். ஆனால் கல்பனா சதீசுடன் சேர்ந்து வாழ விரும்பினார். எனவே மணமக்களை போலீசார் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
Average Rating