டுபாயில் தன் வேலையை காட்டிய இலங்கை பெண்ணுக்கு சிறை!!
Read Time:1 Minute, 21 Second
தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றம் மூன்று மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிறை தண்டனை நிறைவுபெற்றதும் குறித்த பெண்ணை இலங்கைக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேலை வழங்குனர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த இலங்கைப் பெண் மூன்று மாதங்களாக குறித்த வீட்டில் பணியாற்றிய பின் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டில் இருந்த தங்க நகைகளும் காணாமல் போயுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து டுபாய் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் குறித்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதோடு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating