மாணவனைத் தாக்கிய ஆசிரியர் கைது!!
Read Time:59 Second
கம்பஹா பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் பரீட்சை ஒன்றுக்கு சமூகமளிக்கவில்லை என்பதாலேயே ஆசிரியர் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான 16 வயதான சிறுவன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் கைதான ஆசிரியர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் இன்று அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating