யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் உட்பட மூவர் கைது!!
Read Time:1 Minute, 1 Second
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் ஒருவரையும், அதற்கு உதவி புரிந்த இருவரையும் யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று கைதான இவர்கள் கடற்கரை வீதி – கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சந்தேகநபர்களை யாழ். சிறுவர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Average Rating