கணவன் கள்ளக்காதலால் தகராறு: 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!!
திண்டுக்கல் அருகில் உள்ள ஆர்.வெள்ளோடு ஊராட்சி வடகம்பாடியை சேர்ந்தவர் பெருமாள் (வயது35). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (28). இவர்களுக்கு ரெங்கநாதன் (3) என்ற மகனும் தரணி என்ற 7 மாத கைக்குழந்தையும் உள்ளது.
பெருமாளுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்த விவரம் சாந்திக்கு தெரிய வரவே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தற்போது பெருமாள் கோவையில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் சாந்தி வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். தான் இறந்தால் குழந்தைகள் அனாதையாகி விடும் என்று பயந்த அவர் 2 குழந்தைகளையும் வீட்டு அருகில் உள்ள 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார். பின்னர் தானும் அதே தொட்டியில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் 3 பேரின் உடல்களை எடுத்து வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating