நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!!
Read Time:56 Second
சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் புத்தளம் பொலிஸ் மோட்டார் வாகனப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் துப்பாக்கிகளை கொண்டு சென்ற போதே, நேற்று மாலை புத்தளம் – கல்குளிய பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் புத்தளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Average Rating