நாசரேத் அருகே கல்லூரி மாணவி கடத்தல்: காதலனுக்கு வலைவீச்சு!!
நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி பகுதியை சேர்ந்தவர் கோவில்ராஜ். இவரது மகள் ஜான்சிராணி கீதா (வயது18). இவர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற ஜான்சிராணி கீதா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில்ராஜ், மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் அவர் கிடைக்காததால் நாசரேத் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கோவையை சேர்ந்த ஒரு வாலிபருடன் ஜான்சிராணி கீதாவுக்கு காதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்தான் திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating