பாதுகாப்பு கோரி சென்னை காதல் ஜோடி மதுரை போலீசில் தஞ்சம்!!
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சரவணன் (வயது 28). பி.காம். பட்டதாரியான இவர் சென்னையில் அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சென்னை பொழிச்சலூர் மூகாம்பிகை நகரை சேர்ந்த சுரேஷ்பாபுவின் மகள் ஹர்ஷா (வயது 21). எம்.எஸ்.சி. பட்டதாரி. கடந்த 5 வருடங்களாக சரவணன், ஹர்ஷா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் காதல் விசயம் ஹர்ஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ஹர்ஷா வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு தனது காதலன் சரவணனுடன் சென்னை பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மதுரை வந்த அவர்கள் நேற்று இரவு திருநகர் போலீசில் தங்களுக்கு பெற்றோர்கள் வீட்டில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. ஆகவே பாதுகாப்பு வழங்குமாறு கூறி தஞ்சம் புகுந்தனர். இதனையொட்டி திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை செய்தார். மேலும் அவர் ஹர்ஷாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் திருநகர் போலீஸ் நிலையத்திற்கு வர உள்ளனர்.
Average Rating