குழந்தை இல்லாததால் வேறு பெண்ணுடன் தொடர்பு: தகராறு செய்த மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!!
Read Time:1 Minute, 3 Second
உத்தர பிரதேசத்தில் உள்ள முசாபர்நகரைச் சேர்ந்தவர் தேஜ்பால். இவரது மனைவி பாலேஷ். இவர்களுக்கு குழந்தை இல்லை. மனைவிக்கு குழந்தை இல்லாததால் தேஜ்பால் வேறொரு பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையே தேஜ்பால் அந்த பெண்ணை தன் வீட்டிற்கே அழைத்து குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தேஜ்பால் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.
இதுகுறித்து பாலேஷின் அண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து தேஜ்பாலை கைது செய்தனர்.
Average Rating