தேர்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!!
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகேயுள்ள கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். பாக்கு வெட்டும் தொழிலாளி. இவரது மகள் சங்கீதா(வயது 19).
இவர் நரசீபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.சி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார். நிறைய பாடங்களில் அவருக்கு அரியர்ஸ் இருந்ததாக தெரிகிறது.
இதனால் சங்கீதாவின் பெற்றோர் அவரை கண்டித்ததாக தெரிகிறது. பெற்றோர் நம்மை கண்டித்து விட்டார்களே என சங்கீதா மனவேதனை அடைந்தார்.
நேற்று கல்லூரிக்கு சென்ற சங்கீதா மாலை வீடு திரும்பினார். பின்னர் விஷம் குடித்து விட்டார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்த சங்கீதாவை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சங்கீதா இன்று காலை பரிதாபமாக இறந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating