அடம்பிடித்து அழுத மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர தந்தை!!
Read Time:50 Second
உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது சந்த்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வினீத். இவருக்கு மூன்றரை வயதில் மகன் உள்ளான்.
இன்று காலை அவரது மகன் எழுந்ததும் தொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த வினீத் நேராக சமையல் அறைக்குச் சென்று கத்தியை எடுத்து வந்தான். தன் மகன் என்று கூட பார்க்காமல் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவரது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இத்தகவல் அறிந்த போலீசார் வினீத்தை கைது செய்தனர்.
Average Rating