முதியவரை கடிப்பதற்கு முன்பு நாயை கடித்து கொலை செய்த சைக்கோ வாலிபர்!!
Read Time:1 Minute, 4 Second
ஜோலார்பேட்டையில் ரெயிலில் வந்த முதியவரை தாறுமாறாக கடித்து கொலை செய்த சைகோ வாலிபர் ஷாயித் (30). உடல் முழுவதும் ரத்தத்துடன் மிகவும் கோரமாக காட்சியளித்தார்.
ரெயிலில் ஏறுவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு நாய் அவரை குரைத்தது.
அப்போது ஆவேசமாக நாய் மீது பாய்ந்த ஷாயித் நாயை மடக்கி பிடித்து கடித்தார். நாயும் அவரை கடித்தது. ஆனால் வெறிகொண்டு நாயின் கழுத்து மற்றும் உடலில் ஷாயித் கடித்ததில் நாய் இறந்தது.
அதனை கொன்று தூக்கி வீசிய பின்னரே ரெயில் நிலையத்துக்கு வந்து ரெயிலில் ஏறியுள்ளார்.
Average Rating