24 மணித்தியாலங்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் பலி!!

Read Time:1 Minute, 55 Second

697605432Untitled-1கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அகுங்கல்ல பகுதியில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 26 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவர் வெலிகந்தை – அகுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளதோடு, லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை களுத்துறையில் இருந்து பண்டாரகம நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று தெல்துவ – கலவல சந்தியில் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளது.

இதில் சைக்கிளில் பயணித்த 71 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் பாணதுறை – கிரிவேரிய வீதியின் கல்பொக்க வீதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் 77 வயதான குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.

இதேபோல் புத்தளம் பிரதேசத்திலுள்ள சீமெந்து தொழிற்சாலை ஊழியர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

இவர் ஆணமடு பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் குருநாகல் – புத்தளம் வீதியில், சாரகம ஆற்றுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 வயதான சாரதி பலியாகியாகியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளின் சனத் தொகை விபரம் தேவை!!
Next post மாணவனைக் காணவில்லை! பேஸ் புக் காரணமா?