யாழில் 81 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!
Read Time:56 Second
81 கிலோ கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இளவாளை பொலிஸார் தெரிவித்தனர்.
இளவாளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற போது, இவர்கள் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் யாழ். கச்சேரி வீதி மற்றும் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் இளவாளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating