அரசின் கருத்துதான் கட்சியின் கருத்தும்- காங்கிரஸ் கருத்து

Read Time:1 Minute, 27 Second

indea-flag.gifவிடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டும் என்ற பாலசிங்கத்தின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் கோரிக்கை பற்றி காங்கிரஸ் கட்சி தனது கருத்தை தெரிவித்து உள்ளது. “இந்த பிரச்சினையில் மத்திய அரசு ஏற்கனவே தனது நிலையை தெரிவித்து உள்ளது. அரசின் கருத்துதான் கட்சியின் கருத்தும். அதற்குமேல் எதுவும் கூற விரும்பவில்லை” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜீவ் சுக்லா நிருபர்களிடம் தெரிவித்தார்.தொடர்ந்து சரமாரியாக நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,”இந்த பிரச்சினையில் நீங்களே ஒரு முடிவுக்கு வர உங்களுக்கு உரிமை உண்டு.” என்று கூறி சமாளித்தார். இந்த பிரச்சினை உணர்வுபூர்வமானது என்பதால் மேற்கொண்டு விவரமாக எதுவும் கூற காங்கிரஸ் விரும்பவில்லை என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராஜீவ் கொலை சதி விவரங்களை பிரபாகரன் வெளியிடவேண்டும் நீதிபதி ஜெயின் பேட்டி
Next post இலங்கை ஆளுங்கட்சி தலைவரானார் ராஜபக்ஷே!