மத்திய பிரதேசத்தில் 5 சிறுமிகள் மாயம்: கடத்தப்பட்டார்களா?
Read Time:56 Second
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் 5 சிறுமிகள் இன்று காலை திடீரென மாயமானார்கள்.
செஹோர் மாவட்டத்தில் ஜான்பூர் பபாடியா என்ற கிராமம் உள்ளது. இங்கு, இன்று காலை 5 வயது முதல் 11 வயதுள்ள 5 சிறுமிகள் வெளியில் சென்றார்கள். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பதற்றம் அடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதனால் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
5 குழந்தைகளும் கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Average Rating