முத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட ஐ.ஐ.டி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: கமிஷனர் ஆபீசில் புகார்!!
Read Time:1 Minute, 21 Second
முத்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) அலுவலக செயலாளர் எஸ்.ஆர்.குமாரவேல் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:–
சென்னை ஐ,ஐ.டி. வளாகத்தில் மாணவ– மாணவிகள் எந்தவித முன் அனுமதியின்றி ‘கிஸ் ஆப் லவ்’ என்ற பெயரில் காம வெறியாட்டம் ஆடியுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள இந்துக்களின் மனதை இச்சம்பவம் மிகவும் பாதித்துள்ளது.
இதில் ஈடுபட்ட மாணவர்களை ஐ.ஐ.டி.யில் இருந்து டிஸ்மிஸ் செய்வதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தை பேணி காக்கும் தமிழகத்தில் இதுபோன்ற மேற்கத்திய கலாச்சாரத்தை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating