மதுப்பழக்கத்தை மறக்க வழங்கிய மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றவர் சாவு!!
Read Time:1 Minute, 15 Second
சூலூர் அருகேயுள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சங்கர் (வயது 31). கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.
குடிப்பழக்கம் உள்ள இவர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர் மாத்திரை வழங்கினார். அவற்றை தினமும் 1 வீதம் சாப்பிடுமாறு கூறினார்.
ஆனால் சங்கர் டாக்டரின் அறிவுரையை மீறி அத்தனை மாத்திரையையும் ஒரே நேரத்தில் தின்று விட்டார். இதனால் அவரது வயிறு வீங்கியது. உடனடியாக அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating