சேலம் மாணவி கொலை: கொலையாளிகளை பிடித்த கமிஷனர்-போலீசாருக்கு எம்.எல்.ஏ. பாராட்டு!!
Read Time:1 Minute, 16 Second
சேலத்தில் 8–ம் வகுப்பு மாணவி தேஜாஸ்ரீ மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பெரிய பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதுப்பற்றி தெரியவந்ததும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.எல்.ஏ. மாநகர் மாவட்ட தே.மு.தி.க.செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மாணவி கொலை நடந்த 48 மணி நேரத்தில் போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மற்றும் போலீசாருக்கு மேட்டூர் தொகுதி எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.எல்.ஏ. நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார்.
Average Rating