ஆலங்குளம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் உயிரை விட்ட கணவர்!!

Read Time:1 Minute, 18 Second

5761179e-8daa-42d3-9a39-e6d01f8ebdf0_S_secvpfஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையை சேர்ந்தவர் புத்திசிகாமணி (வயது83). ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு சந்திரா (75) என்ற மனைவி மற்றும் 4 மகன்கள் இருந்தனர். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த சந்திரா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் புத்திசிகாமணி வேதனையில் இருந்து வந்தார். நேற்று காலை புத்திசிகாமணி மற்றும் அவரது உறவினர்கள் சுடுகாட்டிற்கு சென்று ஈமகிரியை சடங்கு நடத்தி விட்டு வீடு திரும்பினர். வீடு திரும்பிய புத்திசிகாமணி தொடர்ந்து சோகத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கத்திலேயே புத்திசிகாமணி உயிர் பிரிந்தது. மனைவி இறந்த 2 நாட்களில் கணவனும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து புத்திசிகாமணி உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல் அருகே உறவினர் வீட்டில் பெண் தற்கொலை!!
Next post ஆற்காடு அருகே புதுமண பெண் கொலை: கணவனும் தூக்கிட்டு தற்கொலை!!