ஆற்காடு அருகே புதுமண பெண் கொலை: கணவனும் தூக்கிட்டு தற்கொலை!!

Read Time:4 Minute, 15 Second

b89a574e-c468-4a88-8d82-4d46a1e79ca0_S_secvpfவேலூர் மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 23). இவர் சென்னையில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும் காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சுகுணாவுக்கும் கடந்த ஜூன் மாதம் 24–ந் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின் கணவன்–மனைவி தனிக்குடித்தனமாக குடியேறினர். சில நாட்கள் தம்பதியினர் வாழ்க்கையில் சந்தோஷம் நிலவியது.

இந்த நிலையில் சென்னையில் வேலைபார்த்த அசோக்குமார் திருமணத்துக்கு பின்னர் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து சுகுணா தனது பெற்றோருக்கும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுகுணாவை பார்ப்பதற்காக அவரது தந்தை ரமேஷ்–தாயார் பத்மா ஆகியோர் நேற்று மாலை பூட்டுத்தாக்கு கிராமத்துக்கு சென்றனர். அங்கு மகள் வீட்டின் வெளியே உள்ள இரும்பு கேட், உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

‘‘இளம் வயது என்பதால் உள்ளே அவர்கள் சந்தோஷமாக இருக்கலாம். எனவே இப்போது தொந்தரவு செய்ய வேண்டாம்’’ என சுகுணாவின் பெற்றோர் வெளியிலேயே சற்று நேரம் நின்றனர்.

ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ‘சுகுணா, சுகுணா’ என கூப்பிட்டவாறு கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் பின்பக்கமாக சென்றனர். அங்கு கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சுகுணா தரையில் படுத்த நிலையில் கிடந்தார். அதே நேரத்தில் சுகுணாவின் கணவன் அசோக்குமார் வீட்டின் மேல் இருந்த குழாயில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் பிணமாக தொங்கினார்.

அலறித்துடித்த அவர்கள் அது குறித்து அருகில் உள்ளவர்கள் மூலமாக போலீசாருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து ரத்தினகிரி மற்றும் ஆற்காடு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த சுகுணா மற்றும் அவரது கணவன் அசோக்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சுகுணாவின் கழுத்தில் சிறிய கயிறு இறுக்கியதற்கான தடயங்கள் இருந்தன. எனவே குடும்பத்தகராறு முற்றிய நிலையில் மனைவி அசோக்குமார் தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கி சுகுணாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மேலும் கொலை வழக்கில் தன்னையும் கைது செய்து விடுவார்களோ என பயந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

திருமணமான 5 மாதத்திற்குள் மனைவியை கொலை செய்து கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூட்டுத்தாக்கு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆலங்குளம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் உயிரை விட்ட கணவர்!!
Next post சென்னை: ஓடும் பஸ்சில் இடிமன்னர்களை பிடிக்க பெண் போலீசின் வெள்ளை சுடிதார் படை!!