சொத்து எழுதித்தர மறுத்த முதியவருக்கு இரும்பு பைப் அடி: 4 பேர் கைது!!
கோவை ஆலாந்துறை தெனமநல்லூரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). இவரது மனைவி ராமத்தாள் (60). இவர்களது மகன் மகேஷ், மகள் புஷ்பா மற்றும் மருமகன் வேலுச்சாமி.
முதியவர் சாமிநாதனுக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலம் நரசீபுரத்தில் உள்ளது. அதனை தங்கள் பெயருக்கு எழுதி கேட்டு மனைவி, பிள்ளைகள் மற்றும் மருமகன் ஆகியோர் வற்புறுத்தினர். ஆனால் சொத்து நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. யார் பெயருக்கும் எழுதி தரமாட்டேன் என்று சாமிநாதன் மறுத்தார்.
சம்பவத்தன்று மீண்டும் சொத்து தொடர்பான பிரச்சினை எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த மனைவி, மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோர் இரும்பு பைப்பை எடுத்து சாமிநாதனை தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. வலியால் அலறித்துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
காயம் அடைந்த சாமிநாதன் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் ராமத்தாள், மகேஷ், புஷ்பா, வேலுச்சாமி ஆகியோரை கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
Average Rating