பறந்து கொண்டே காம ஆசையை பூர்த்தி செய்துகொள்ள முயன்ற இலங்கையர் கைது!!
Read Time:1 Minute, 3 Second
லண்டனில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) மாலை லண்டனில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
27 வயது பிரித்தானிய பெண் மீதே சந்தேகநபர் பாலியல் வல்லுறவு புரிய முயற்சித்துள்ளார்.
இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் வசித்துவரும் 41 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating