புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த மணமகள்: அன்றிரவே விவாகரத்து!!

Read Time:1 Minute, 36 Second

56825440801சவுதி அரேபிய இளைஞர் ஒருவர் திருமணத்தன்று, மணமகள் புகைப்படத்திற்கு முகம்காட்டியதால் அன்றிரவே அவரை விவாகரத்துச் செய்துள்ளார்.

சவுதி அரேபியாவின் மதினா நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்திற்கு முன்பு மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் திருமணம் நடந்த அன்று இரவு மணமகனும், மணமகளும் நேருக்கு நேர் முகம் பார்க்கும் சடங்கு நடந்தது. அப்போது புகைப்படம் எடுக்கப்பட்டது.

இதற்காக மணமகளிடம் முகம் காட்டும்படி கூறியதும், உடனே அவரும் சிரித்தபடி பர்தாவை விலக்கிவிட்டு புகைப்படத்திற்கு முகம் காட்டினார். இதனால் மணமகன் கடும் எரிச்சலும், ஆத்திரமும் அடைந்தார்.

எனக்கு முதலில் முகம் காட்டாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதா என கோபமடைந்தார். உடனே, அந்த மணமகளை அன்று இரவே விவாகரத்து செய்தார்.

இதனால் திருமணத்துக்கு வந்த உறவினர்களும்,. மணமகளும், கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சினையை தீர்த்து விவாகரத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. விவாகரத்து நடந்து முடிந்து விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற 4 பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை!!
Next post நரிக்குடி அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: காதலன் கைது!!