இரணியல் அருகே தாய்–மகள் மீது தாக்குதல்: வாலிபர்கள் மீது வழக்கு!!
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை சித்தன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி ஜெனட் மேரி(வயது 44).
ஜான் கென்னடிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவின்ராஜ்(25), இக்னேசியஸ் ஷாஜி ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த விரோதத்தில், பிரவின் ராஜூம், இக்னேசியஸ் ஷாஜியும் கடந்த 16–ந் தேதி ஜான் கென்னடி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் ஜான் கென்னடி இல்லை என தெரிகிறது. இந்த ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்த ஜெனட் மேரியை தாக்கி உள்ளனர். இதனை தடுக்க முயன்ற அவரது மகள் ஜெனிஷாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த ஜெனட் மேரி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரவின்ராஜ், இக்னேசியஸ் ஷாஜி ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 4 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் விசாரணை நடத்தி இருவரையும் தேடி வருகின்றார்.
Average Rating