நரிக்குடி அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: காதலன் கைது!!
Read Time:1 Minute, 17 Second
அருப்புக்கோட்டை போலீஸ் சரகம் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் கல்பனாதேவி (வயது20). அதே ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முருகன் (30), கேபிள் ஆபரேட்டர்.
கல்பனாவும், முருகனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்பனாவிடம் முருகன் பலமுறை பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முருகனுக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்பனாதேவி உடனே முருகனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இது குறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
Average Rating