ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கவும் போட்டியிடவும் மஹிந்தவுக்கு ஸ்ரீசுக அனுமதி!!
ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுக்கவும் மஹிந்த ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி அளித்துள்ளது.
நேற்று (19) இரவு ஜனாதிபதி மாளிகையில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து ஜனாதிபதித் தேர்தல் செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இன்று (20) இரவு இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை விடுப்பார் என கூறப்பட்டுள்ளது.
Average Rating