ராஜகிரிய பாடசாலை அதிபரை காணவில்லை!!
Read Time:49 Second
இராஜகிரிய பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் காணாமல் போயுள்ளதாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராஜகிரிய ஹேவாவிதாரண மகா வித்தியாலத்தின் அதிபர் என்.என். மித்ரபால நேற்று முதல் காணவில்லை என்று முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
பிரதி அதிபர் வீட்டுக்குச் சென்று பாடசாலையின் சாவியை ஒப்படைத்து திரும்பிய அதிபரை காணவில்லை என அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Average Rating