அத்துரலியே ரத்தன தேரரின் விகாரை மீது கல்வீ்ச்சுத் தாக்குதல் நடத்தத் திட்டம்!!
Read Time:1 Minute, 15 Second
ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் விகாரை மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ´சதஹம் செவன´ சர்வதேச பெளத்த தகவல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ´வத்தஹேன விஜித தேரர்´ தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் தற்போது ராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தற்போது பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக ´வத்தஹேன விஜித தேரர்´ அத தெரண செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.
ஆசிரமத்தில் தற்போது 10 தேரர்கள் வரை இருப்பதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Average Rating