ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை கற்பழிக்க முயற்சி: பஞ்சாயத்து ஊழியர் கைது!!

Read Time:2 Minute, 14 Second

d356a7c5-5fca-4e8a-85f4-e2c980fbaf02_S_secvpfதிருவனந்தபுரம் அருகே வழுதகாடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள இடபால் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் திருச்சூர் செல்வதற்காக திருவனந்தபுரம்–கோழிக்கோடு ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

அந்த ரெயில் ஆலுவா ரெயில் நிலையத்தில் நின்ற போது, நந்தகுமார் பயணம் செய்த பெட்டியில் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி ஏறினார்.

ரெயில் புறப்பட்ட பிறகுதான் அந்த பெட்டியில் தானும், ஒரு வாலிபர் மட்டும் இருப்பதை கல்லூரி மாணவி பார்த்தார். இதனால் அவர் ஒரு ஓரமான இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.

ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் நந்தகுமார் அந்த மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கினார். அவரை கட்டிப்பிடித்து கற்பழிக்க முயன்றார். இதனால் பயந்து போன அந்த மாணவி அலறி கூச்சல் போட்டார்.

மேலும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் நந்தகுமார் அவரை தடுத்து தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்குள் அந்த ரெயில் ஆலப்புழா ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. உடனே அந்த மாணவி நந்தகுமாரிடம் இருந்து தப்பி ரெயிலில் இருந்து இறங்கி ஓடிச்சென்று ரெயில்வே போலீசில் இதுபற்றி புகார் தெரிவித்தார்.

உடனே போலீசார் ரெயிலில் ஏறி நந்தகுமாரை கைது செய்தனர். பிறகு அவரை கொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாளை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுத்த 16 வயது பள்ளி மாணவி!!
Next post தேர்தல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!!