அந்தியூர் அருகே எருமை மாடு ஈன்ற வெள்ளை நிற கன்று குட்டி!!

Read Time:1 Minute, 39 Second

33121f27-0ae6-48c0-a430-97b9feabc163_S_secvpfஅந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிருஷ்ணாபுரம் பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 66). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் மாட்டுக்கு தேவையான தீவனம் பயிரிட்டு உள்ளார்.

மேலும் 20 எருமை மாடுகளையும், 4 பசு மாடுகளையும் வளர்த்து பால் வியாபாரமும் செய்து வருகிறார்.

இதில் ஒரு எருமை கன்று குட்டி ஈன்றது. இந்த கன்று குட்டி பசு மாடு ஈன்ற கன்று குட்டி போல வெள்ளை வெளேர் என்று உள்ளது.

இந்த வெள்ளை நிறத்தில் உள்ள அதிசய கன்று குட்டியை அப்பகுதி மக்கள் வந்து ஆச்சரித்துடன் பார்த்து செல்கிறார்கள்,

இதுபற்றி விவசாயி முத்துசாமி கூறியதாவது:–

நான் 20 எருமை மாடுகள் வளர்த்து வருகிறேன். இதுவரை எந்த எருமை மாடும் இதுபோன்ற வெள்ளை நிறத்தில் கன்று போடவில்லை, இப்போதுதான் முதல் முறையாக வெள்ளை நிறத்தில் கன்று போட்டு உள்ளது.

பசு மாட்டை போல வெள்ளை நிறத்தில் இந்த கன்று குட்டி இருந்தாலும் அதன் முகம் மற்றும் தோற்றம் எருமை கன்றுகுட்டி போல தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன்..!!
Next post பாளை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுத்த 16 வயது பள்ளி மாணவி!!