தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!!
Read Time:1 Minute, 7 Second
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் சவரிமங்களத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வெங்கடேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேஸ்வரி எதற்காக தற்கொலை செய்தார் என்று தெரியவில்லை. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ.வினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating