மனிதக்கழிவில் வாயு – வேகமாக இயங்கும் பேருந்து!!
மனிதக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் வாயுவில் இயங்கும் பேருந்து ஒன்றுதனது முதல் பயணத்தை சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் இயக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டின் Bath நகரில் இருந்து Bristol நகருக்கு சமீபத்தில்புதியதாக பயோ பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துஓடுவதற்கு டீசல் தேவையில்லை. மனிதக்கழிவுகள் மற்றும் கெட்டுப்போனஉணவுப்பொருட்கள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் biomethane என்றவாயுவில் இந்த பேருந்து இயங்குவதாக கூறப்படுகிறது.
இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் 40 பேர் வரை பயணம் செய்யலாம். ஐந்துமனிதர்கள் தங்கள் வாழ்நாளில் வெளியேற்றும் கழிவுகளில் இருந்து ஒரு டாங்க்வாயு தயாரிக்கலாம் என்றும், அதில் சுமார் 190 கிமீ வரை பேருந்தை இயக்கலாம்என்றும் இந்த பேருந்தை வடிவமைத்தவர்கள் கூறியுள்ளனர்.
இன்று தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ள இந்த பேருந்து படிப்படியாகஅதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பேருந்தில் மனிதர்கள்டாய்லட்டில் உட்கார்ந்திருப்பது போன்ற படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating