துப்பாக்கிச் சூடு – ஐ.தே.கவைச் சேர்ந்த ஒருவர் காயம்!!
Read Time:1 Minute, 17 Second
பேருவளை – மஹ்கோன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று இரவு இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இவர் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை குருநாகல் – மாவத்தகம பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் சில வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Average Rating