பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விஷேட சுற்றிவளைப்பு!!
Read Time:1 Minute, 10 Second
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடு பூராகவும் விஷேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நுவர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மாதம் முழுவதும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபைத் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பதுக்குதல் போன்ற விடயங்களில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதி திகதியை மாற்றியமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய வர்த்த நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் ரூமி மர்சூக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating