பிரதேச செயலாளர்களுக்கு பெப்ரலின் கோரிக்கை!!
Read Time:1 Minute, 2 Second
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பாரபட்சமற்ற முறையில் செயற்படுமாறு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பிரதேச செயலாளர்களுக்கு பெரும் பொறுப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் தேர்தல் நடவடிக்கைகளின்போது, பிரதேச செயலாளர்கள் நேர்மையாகவும் நடுநிலையாகவும் செயற்படுவது அவசியம் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
Average Rating