பல ஆண்களை மணம் முடித்து, கொன்று, சொத்துக்களை அபகரித்த பாட்டி!!
ஜப்பானில் வயதான ஆண்களை திருமணம் செய்து , பின் அவர்களைக் கொன்று சொத்துக்களை அபகரிக்கும் மூதாட்டி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
67 வயதான இந்த மூதாட்டியின் பெயர் சிசாகோ ககேஹி.
´வயதான, நோய்வாய்ப்பட்ட, குழந்தைகள் இல்லாத ஆண் துணை வேண்டும்´ என, செய்தித் தாள்களில் விளம்பரம் செய்து, வசமாக சிக்கும் ஆண்களை தனது வலையில் இவர் வீழ்த்தியுள்ளார்.
அண்மையில் 75 வயதான, இவரின் ஆறாவது கணவர் மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, ககேஹியிடம், முறைப்படி பொலிசார் விசாரித்ததில், இந்த விடயம் அப்பலமாகியுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் இவரின் வலையில் விழுந்து, தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவரின் வீட்டில் சோதனை நடத்திய பொலிசார், சயனைடு எனப்படும் விஷம் மற்றும் மோசமான மருந்துகளையும், பயங்கர ஆயுதங்களையும் கண்டுபிடித்து உள்ளனர்.
ஒவ்வொரு ஊரிலும், வெவ்வேறு பெயரில், ஆண் துணை தேடிய இந்தப் பெண், உறவினர்கள் இல்லாத, கோடீஸ்வரர்களை வளைத்து, சில காலம் அவர்களுடன் வாழ்ந்து, அவர்களை கொன்று பின், பணத்தை சுருட்டிய பிறகு, அடுத்த கணவர்களை தேடி, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வந்துள்ளார்.
இவரை அந்நாட்டு பத்திரிகைகள், கறுப்பு விதவை என அழைத்து, இவரின் கதையை, பக்கம் பக்கமாக வெளியிட்டு வருகின்றன.
Average Rating