நண்டு பிடிக்கச் சென்ற வாலிரை புலி இழுத்துச் சென்றது!!
மேற்கு வங்காள மாநிலத்தின் சுந்தரவனம் காட்டுப்பகுதி வழியாக பாயும் ஒரு ஓடையில் இன்று பிற்பகல் 3 நண்பர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, காட்டுப் புதர்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி ஓடையை நெருங்கிவந்த ஒரு புலி தினேஷ் மொண்டல்(23) என்ற வாலிபரின் மீது பாய்ந்தது. அவரது கழுத்தை வாயினால் கவ்வியபடி காட்டுக்குள் இழுத்துச் சென்றது.
உடன் இருந்த நண்பர்கள் இந்தக் காட்சியை கண்டு பீதியடைந்து தலைதெறிக்க ஓடினர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த வனத்துறை காவலர்களிடம் இந்த தகவலை தெரிவித்ததையடுத்து, விரைந்து செயல்பட்ட வனத்துறை காவலர்கள் புலி ஓடிச் சென்ற பாதையை பின்தொடர்ந்துச் சென்றனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி அவர்கள் காட்டுக்குள் நுழைவதை கண்ட புலி பயந்துப்போய் தப்பி ஓடியது. உடல் முழுக்க ரத்த காயங்களுடன் ஒரு மரத்தின் அடியில் கிடந்த தினேஷை மீட்ட அவர்கள் உடனடியாக தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
Average Rating