கோவையில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம்: பெண் புரோக்கர்கள் கைது!!
கோவை உப்பு மண்டி வீதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரங்களில் விபசாரம் நடைபெறுவதாக வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும் வெரைட்டிஹால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஒரு நபரை வாடிக்கையாளர் போல் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அனுப்பி கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது.
இதையடுத்து வெரைட்டிஹால் போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கிருந்த விபசார புரோக்கர்களான புலிய குளத்தை சேர்ந்த கீதாமேரி (வயது 58), சுக்கிரவார் பேட்டையை சேர்ந்த கீதா (35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.8300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அங்கிருந்த விபசார அழகிகள் பெங்களூரை சேர்ந்த ஷீலா ஷேக் (23) மற்றும் சுக்கிரவார் பேட்டையை சேர்ந்த அம்பிகா (26) ஆகிய 2 பேரையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு விபசார கும்பல் குடும்பத்தினர் போல் நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.
Average Rating