தர்மபுரி அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை!!
Read Time:1 Minute, 22 Second
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள மோட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி (28) மினிடோர் ஆட்டோ டிரைவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் மூலம் கடன் வாங்கி சொந்தமாக மினிடோர் ஆட்டோ ஒன்று வாங்கினார்.
வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் போனதால் ஆட்டோவை விற்று கடனை திரும்ப செலுத்த முயன்றார்.
ஆனால் அவரால் கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை. இதன் காரணமாக சின்னசாமி கடந்த சிலநாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating