என் கணவருக்கும், துணை நடிகைக்கும் தொடர்பு: ஏட்டு மனைவி புகார்!!
மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (35).
இவர் நேற்று கிண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில், எனது கணவர் வீட்டுக்கு வருவதில்லை. எங்கள் குடும்பத்தை கவனிப்பதில்லை. எனது கணவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வடிவு விசாரணை நடத்தினார்.
விசாரணையில் வேளச்சேரி லட்சுமிநகர் முதல் தெருவில் ஒரு வாடகை வீட்டில் ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்திய அரிகிருஷ்ணனை பிடித்தனர். அந்த பெண்ணையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில் அந்த பெண் பெயர் சங்கீதா (34) என்பதும், துணை நடிகை என்றும் தெரியவந்தது.
சங்கீதா 2007–ல் வட பழனியில் நடந்த சீனிவாசரெட்டி செல்வா கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், 2011–ல் பள்ளிக்கரணையில் விபசார வழக்கில் பிடிபட்டவர் என்பதில் தெரியவந்தது.
விபசார வழக்கில் அவரை போலீஸ் ஏட்டு அரிக்கிருஷ்ணன்தான் கோர்ட்டுக்கு அழைத்து செல்வார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கமான பழக்கத்தில் வேளச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து சங்கீதாவை தங்கவைத்து அவளுடன் அரிகிருஷ்ணன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.
Average Rating