குளித்தலை அருகே வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவர் மீது வழக்குப்பதிவு!!

Read Time:2 Minute, 12 Second

9e945504-7df7-4308-8c15-b08ce337220b_S_secvpfகரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நச்சலூர் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் புரசம்பட்டியை சேர்ந்த முத்துமாரி (19) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. 3 வருடமாக காதலித்து வந்த கார்த்திக்–முத்துமாரி ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள அய்யர்மலை கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு கார்த்திக் உடன் முத்துமாரி இருந்தார். இந்த நிலையில் கார்த்திக்கின் உறவினர்கள் சுரேஷ், லெட்சுமி மற்றும் சாந்தி ஆகியோரது தூண்டுதலின் பேரில் முத்துமாரியிடம் வரதட்சணையாக ரூ.50 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகை வாங்கி வரும்படி கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார்.

மேலும் முத்துமாரியை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். இதை தொடர்ந்து குளித்தலை மகளிர் போலீசில் முத்துமாரி புகார் செய்தார். புகார் குறித்து வழக்கு பதிவு செய்யாததால் குளித்தலை ஜே.எம். 2 கோர்ட்டில் முத்துமாரி மனு கொடுத்தார்.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் குளித்தலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருத்தணியில் கழுத்தை அறுத்து மனைவி கொலை: கணவர் போலீசில் சரண்!!
Next post கூட்டமைப்பு முஸ்லிம்களையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுகின்றது!!