தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்: ஒரே நாளில் 3 பேர் உயிரை மாய்த்தனர்!!

Read Time:3 Minute, 7 Second

5675d8ea-b426-4ca8-b0c1-1fed1208896a_S_secvpfதேனி அருகே உள்ள சின்னமனூர் போலீஸ் சரகம் புலிக்குத்தியை சேர்ந்தவர் சுப்புராம். விவசாயி. இவர் நீண்ட நாட்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.

டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற்றும் இவரது நோய்க்கு விடை தெரியாமல் இருந்தார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்வது என தீர்மானித்தார். அதன்படி வீட்டில் சுப்புராம் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அருகே ஜெயமங்கலம் போலீஸ் சரகம் சிந்துவம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் உடல் நோயால் தொடர்ந்து அவதிப்பட்டார். எனவே உயிரை மாய்த்து கொள்ள தீர்மானித்தார். அதன்படி அங்குள்ள சுடுகாட்டிற்கு சென்றார். ஏற்கனவே வாங்கி சென்ற விஷத்தை குடித்து சுடுகாட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை தூக்கி கொண்டு ஜெயமங்கலம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானது. உடனடியாக தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிரிழந்தார். ஜெயமங்கலம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் பழனி. அவரது மகன் சுப்புராஜ்(வயது 28). இவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக திரிந்து வந்தார். இதனை பழனி கண்டித்தார். இதனால் மனம் உடைந்த சுப்புராஜ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுப்புராஜை தூக்கி கொண்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் ஒருவருக்குபின் ஒருவராக உயிரை மாய்த்துக்கொண்டு வருகிறார்கள். இதனால் தேனி மாவட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10–ம் வகுப்பு மாணவர்கள்!!
Next post ஆளும் கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு!!