வத்திராயிருப்பு அருகே செங்கல் சூளை வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!
Read Time:1 Minute, 0 Second
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்துள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகள் பொன்மலர் (வயது23). இவர் அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பொன்மலர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த மாரிச்சாமி மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் கூமாபட்டி போலீசில் புகார் செய்து பொன்மலர் தானாவே எங்கேனும் சென்றாரா? அல்லது யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரித்து வருகின்றனர்.
Average Rating